fbpx

பெரும் சோகம்..!! தமிழ் தேசிய செயற்பாட்டாளர் சீதையின் மைந்தன் காலமானார்..!! பிரபலங்கள் இரங்கல்..!!

தமிழ் தேசிய செயற்பாட்டளர்களில் ஒருவரான சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி, உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ்நாட்டின் தீவிர தமிழ் தேசிய முன்னோடிகளில் ஒருவர் சீதையின் மைந்தன். தட்சிணாமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர், தமிழர் நிலம், தமிழர் உரிமைகள் தொடர்பான களங்களில் தீவிரமாக இயங்கி வந்தவர். கச்சத்தீவு மீட்புக்கான முன்னெடுப்புகள் பலவற்றையும் மேற்கொண்டார்.

கச்சத்தீவு உட்பட தமிழர் உரிமைகள் தொடர்பாக பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ் தேசியத்தை முன்வைக்கும் கட்சியினர் மற்றும் இயக்கத்தினர் மத்தியில் சீதையின் மைந்தன் கருத்துக்கள் வரவேற்பு பெற்றுள்ளன. மாறாக திராவிட இயக்கத்தினர் மற்றும் பெரியாரிய ஆதரவாளர்கள் இவருடன் கடுமையாக முரண்பட்டிருந்தனர்.

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீதையின் மைந்தன் மறைவை அடுத்து திருவள்ளூர் நெற்குன்றத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் இன்று இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

Chella

Next Post

3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது பயங்கர தாக்குதல்…!

Sat Nov 4 , 2023
வடக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் மியான்வாலியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது இன்று காலை பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு தலிபான்களுடன் தொடர்புடைய தெஹ்ரீக்-இ-ஜிஹாத் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் மத்திய பகுதியில் உள்ள பயிற்சி முகாம் மீது 6 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மூன்று தீவிரவாதிகள் தளத்திற்குள் நுழைவதற்கு முன்பே கொல்லப்பட்டதாகவும், […]

You May Like