fbpx

பெரும் சோகம்..!! நாளொன்றுக்கு 120 குழந்தைகளை கொல்லும் இஸ்ரேல்..!! பாலஸ்தீனம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!!

கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான போர் காரணமாக தற்போது வரை 1,688 குழந்தைகள் காசாவில் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அனைத்துலக குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனம், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலின் தாக்குதலில் நாளொன்றுக்கு 120 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்படுவதாக பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதே சமயத்தில், சுமார் 27 குழந்தைகள் மேற்கு கரையில் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

1,400 பேர் காணாமல் போயிருப்பதால், குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை மேலும், அதிகரிக்கலாம் என்றும் பாலஸ்தீன அனைத்துலக குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. காசா முழுவதும் தொடர் குண்டுவெடிப்புகளில் இருந்து தப்பிய பாலஸ்தீன குழந்தைகள் இப்போது கடுமையான மனிதாபிமான நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர்.

Chella

Next Post

25 ஆண்டுகளாக நேர்மையுடன் உழைத்தேன்..! பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவிப்பு...!

Mon Oct 23 , 2023
பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது விலகல்‌ கடிதத்தில்; மிகுந்த வேதனையுடன் கட்சியில் இருந்து விலகுவதாகவும், பாஜக வளர்ச்சிக்காக கடந்த 25 ஆண்டுகளாக நேர்மையுடன் உழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் பல்வேறு களப்பணியாற்றியும் எனக்கு சீட்டு கொடுக்கப்படவில்லை.‌ பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தும் எனக்கு கட்சியில் ஆதரவு இல்லை என்று […]

You May Like