ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், 16 வீரர்கள் மரணம் அடைந்தனர்.
வடக்கு சிக்கிம் ஜமா பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். மேலும், விபத்தில் சிக்கிய 4 வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![பெரும் சோகம்..!! பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்..!! 16 வீரர்கள் மரணம்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-23-at-4.36.37-PM-1024x614.jpeg)
இந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ”வடக்கு சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக தேசம் ஆழ்ந்த நன்றியுடன் உள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.