fbpx

பெரும் சோகம்..!! ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி..!! வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!!

வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, கீழே தள்ளிவிடப்பட்ட நிலையில், வயிற்றில் இருந்த கரு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று வயிற்றில் உள்ள 4 மாதக் கரு உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று வரை குழந்தையின் இதயத் துடிப்பு இருந்ததாகவும், இன்று நின்றுவிட்டதாகவும் இதனால், உடனே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட இளைஞர் ஹேமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ரயிலில் இருந்து கீழே விழுந்ததில், கர்ப்பிணிக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கர்ப்பிணியை மீட்ட ரயில்வே காவல்துறையினர், மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read More : ”என்னது பாஜக முன்னிலையா”..? ”ஈகோ பிரச்சனையை ஓரங்கட்டிவிட்டு சிந்தியுங்கள்”..!! இந்தியா கூட்டணியை அட்டாக் செய்த திருமாவளவன்..!!

English Summary

The death of a 4-month-old fetus in the womb today, while the pregnant woman was receiving treatment, has caused great sadness.

Chella

Next Post

ஆட்சியை இழந்த ஆம் ஆத்மி..!! ஒரு ஆவணங்கள் கூட மிஸ் ஆகக்கூடாது..!! டெல்லி தலைமைச் செயலகத்திற்கு சீல்..!!

Sat Feb 8 , 2025
Strict restrictions have been imposed in the Delhi Secretariat.

You May Like