fbpx

வரும் நவம்பர் 10-ம் தேதி… ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…! முழு விவரம்

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் 04.10.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநில ஓய்வூதிய இயக்குநர் அவர்களால் நடத்தப்பட உள்ளது. ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை மூன்று நகல்களில் காஞ்சிரம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு 17.09.2024- தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இக்கூட்டத்தில் முறையீடுகளை அளிக்கும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களின் சார்பாக ஒரு சங்கத்திற்கு ஒரு நிர்வாகி வீதம் கலந்து கொள்ளலாம். 17.09.2024-க்குள் பெறப்படும் முறையீடுகளின் மீது மட்டுமே குறைகளைவு அறிக்கையினை சம்மந்தப்பட்ட துறையிடமிருந்து பெற்று 04.10.2024 அன்று நடைபெறும் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நடவடிக்கை விவரம் தெரிவிக்கப்படும். எனவே ஓய்வூதியர்கள் தங்களது முறையீடுகளை மேற்குறிப்பிட்ட தேதிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Grievance Redressal Day Meeting for Retired Government Servants to be held.

Vignesh

Next Post

பாராலிம்பிக்!. இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி, வெண்கலம்!. வரலாற்று சாதனை படைத்த ப்ரீத்தி பால்!. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!

Mon Sep 2 , 2024
India's Nishad Kumar won the silver medal in Men's High Jump T47 event at Paris Paralympics 2024.

You May Like