குரூப் 2ஏ தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப்-2, குருப்-2ஏ மெயின் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் ஜனவரி 11ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்நிலையில், குருப்-2 பிரிவின் கீழ் வரும் நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு ஜனவரி 27ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குருப்-2ஏ தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் மார்ச் மாதம் கடைசி வாரத்திற்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.