fbpx

அரிசி மீதான ஜிஎஸ்டி வரி..! ஓட்டல்களில் இட்லி, தோசை போன்ற உணவு வகைகளின் விலை மேலும் உயருகிறது..!

அரிசி மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதால், ஓட்டல்களில் சாப்பிடக்கூடிய உணவு பண்டங்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

மக்கள் அன்றாடம் சாப்பிடக்கூடிய பொருட்கள் மீதும் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்து வருகிறது. இதுவரை வரி விதிக்கப்படாமல் இருந்த அரிசி, தயிர் போன்ற உணவு பொருட்கள் மீதும் தற்போது ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி விவசாயிகள் உற்பத்தி செய்து தரும் அரிசி புதிதாக ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்பட்டதால் அரிசி ஆலை மற்றும் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரிசி மீதான ஜிஎஸ்டி வரி..! ஓட்டல்களில் இட்லி, தோசை போன்ற உணவு வகைகளின் விலை மேலும் உயருகிறது..!

ஆனாலும் அரிசி மீதான ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்தது. அரிசி மீது ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதால் ஓட்டல்களில் சாப்பிடக்கூடிய உணவு பண்டங்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. அரிசியிலான உணவுகளான இட்லி, தோசை, பொங்கல், ஆனியன் ஊத்தப்பம் போன்ற உணவு பண்டங்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஓட்டல்கள் சங்க தலைவர் ரவி கூறுகையில், “அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதால் உணவு பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஓட்டல் உணவு பொருட்களுக்கு மட்டும்தான் இரட்டை வரி விதிக்கப்படுகிறது. ஏற்கனவே, ஓட்டல் உணவு பண்டங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.

அரிசி மீதான ஜிஎஸ்டி வரி..! ஓட்டல்களில் இட்லி, தோசை போன்ற உணவு வகைகளின் விலை மேலும் உயருகிறது..!

அரிசியில் இருந்துதான் இட்லி, தோசை வகைகள், பொங்கல் போன்றவை தயாரிக்கப்படுகிறது. இவை உள்பட டீ, காபி, வடை, பூரி, சப்பாத்தி மற்றும் அசைவ உணவுகள் அனைத்திற்கும் 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது அரிசிக்கு தனியாக ஜி.எஸ்.டி. வரி தற்போது விதிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களைதான் பாதிக்கும். எந்த வரி விதித்தாலும் அந்த வரி சுமை இறுதியில் பொதுமக்களின் தலையில்தான் விழுகிறது. இதனால், ஓட்டல் தொழில் மேலும் பாதிக்கப்படும். ஏற்கனவே ஓட்டல்களில் விலை உயர்வால் வியாபாரம் குறைந்துள்ளது. கியாஸ், பால், மளிகை பொருட்கள், சொத்து வரி உயர்வால் வாடகை அதிகரிப்பு போன்றவற்றால் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அரிசிக்கு வரி விதித்திருப்பது இத்தொழிலை மேலும் நசுக்குவதாக அமைந்து உள்ளது.

அரிசி மீதான ஜிஎஸ்டி வரி..! ஓட்டல்களில் இட்லி, தோசை போன்ற உணவு வகைகளின் விலை மேலும் உயருகிறது..!

உயர்த்தப்பட்ட 5 சதவீத வரியால் இட்லி, தோசை, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைளின் விலை 5 சதவீதம் உயரும். அதாவது 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரிக்கும். தற்போது 2 இட்லி ரூ. 30-க்கும், தோசை வகைகள் ரூ.50 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது. இவற்றின் விலை மேலும் உயரும்போது பொதுமக்கள் ஓட்டலுக்கு வரவே பயப்படுவார்கள். ஓட்டல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு நடத்த முடியாமல் பலர் வெளியேறி விட்டனர். இந்நிலையில், தொடர்ந்து ஓட்டல் தொழில் மீது வரி விதிப்பதால் உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும். ஒரு பொருளுக்கு பல வடிவில் வரி விதிப்பது முறையா? இது பொதுமக்களை கசக்கி பிழிவதற்கு சமம்” என்று கூறினார்.

Chella

Next Post

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் குழு மேல் குழு அமைத்து என்ன பயன்..? சிபிஐ விசாரிக்க வேண்டும்..! ஜெயக்குமார்

Wed Jul 20 , 2022
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் குழு மேல் குழு அமைத்து எந்த பயனுமில்லை என்றும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகம் தாக்குதலில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த அதிமுகவைச் சேர்ந்த 14 பேர் ஜாமீனில் இன்று வெளியே வந்தனர். அவர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியினருடன் வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் குழு மேல் […]
’தமிழ்நாட்டின் மானம் கப்பலேறும் அளவுக்கு திமுக அரசு ஆட்சி செய்கிறது’..! - ஜெயக்குமார் காட்டம்

You May Like