fbpx

அரசு பள்ளி ஆசிரியர்கள் இடையே ஊதிய முரண்பாடு…! புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு…!

அரசு பள்ளி ஆசிரியர்கள் இடையேயான ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றிக்கையில்; பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வரும் அனைத்து நிலை ஆசிரியர்கள், பணியாளர்களில் மூத்தோர், இளையோர் ஊதிய முரண்பாட்டை சரி செய்வதற்கான பரிந்துரைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பணியில் மூத்தவரின் ஊதிய முரண்பாடு சரிசெய்ய, சார்ந்த அலுவலர் நிலையிலேயே ஆய்வு செய்து உரிய விதிகளின்படி பரிந்துரை அனுப்ப வேண்டும். பணியில் மூத்தவர் மற்றும் இளையவர் இருவரின் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் எந்த பக்கமும் விடுபடாமல், சார்ந்த அலுவலர்கள் கையொப்பமிட வேண்டும்.

மேலும் ஏற்கெனவே ஊதிய முரண்பாடு சமன் செய்து உத்தரவு வழங்கப்பட்டிருந்தால், அதுகுறித்த நகல்களை கருத்துகளுடன் இணைத்து அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிந்துரைகளை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பருவமழை!… தமிழகத்தை அச்சுறுத்தும் 4 வகை கொடிய பாம்புகள்!… கண்டிப்பா இதை செய்யாதீர்கள்!

Mon Oct 30 , 2023
பருவமழைக் காலங்களில் பாம்புக் கடித்தால் என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாதவை குறித்து ஈரோடு தாளவாடி வனச்சரகர் சதீஷ் விளக்கமளித்துள்ளார். அனைத்து வகையான பாம்புகளும் விஷப் பாம்புகள் இல்லை என்றாலும், பாம்புகளுக்குப் பயந்து பலர் ஓடுகிறார்கள். தூரத்தில் பாம்பு இருப்பது தெரிந்தாலும் உடனே அங்கிருந்து ஓட முயல்கின்றனர். இருப்பினும், மழைக்காலம் வரும்போது, பாம்புகள் மிகவும் ஆபத்தானவை. கிராமங்கள், புறநகர் பகுதிகள் மற்றும் கால்வாய்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பாம்பு தொல்லை அதிகமாக உள்ளது. […]

You May Like