fbpx

மொட்டை மாடியில் உறங்குவதில் ஏற்பட்ட தகராறு…..! பெற்ற மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை குஜராத்தில் பகீர் சம்பவம்….!

சில தினங்களுக்கு முன்னர் தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவரை ஒரு இளைஞர் 40 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. தொடர்பான மனதை உறைய வைக்கும் வீடியோ இணையதளத்தில் பரவி எல்லோரையும் பதைபதைக்க வைத்த நிலையில், தற்போது இதே பாணியில் ஒரு கொலை சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

அதாவது, குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் ராமானுஜாகு என்ற நபர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவியும், மகன்களும் சாந்தா என்ற 19 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் தான் கடந்த 18ஆம் தேதி இரவு நேரத்தில் மொட்டை மாடியில் உறங்குவது குறித்து ராமானுஜுக்கும் அவருடைய மகளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மனைவியும் மகன்களும் தலையிட்டதால் கணவர் ராமானுஜ் ஆத்திரம் கொண்டார். வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மகளை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதைக்கண்டு பதறிப்போன தாய் ரேகா மகளை காப்பாற்றுவதற்காக குறுக்கே பாய்ந்தார். இதில் அவருக்கும் கத்திக் குத்து விழுந்து உள்ளது. ஆனாலும் ராமானுஜ் தன்னுடைய மகளை ஆத்திரம் தீர கத்தியால் பட்டிருக்கிறார் இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சாந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.

அதே கொலை வெறியுடன் ராமானுஜ் தன்னுடைய மனைவியை கத்தியால் குத்தி அவருடைய இரண்டு விரல்களை வெட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை ராமானுஜை கைது செய்து சிறையில் அடைத்தது. மனைவி ரேகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில், அந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Next Post

புறாக்களின் தொந்தரவால் கணவனை பிரிந்த மனைவி…..! வேலூர் அருகே சோகம்…..!

Thu Jun 1 , 2023
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்துள்ள பிராமனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகளை உள்ளனர். இந்த நிலையில், சதீஷ்குமார் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கினார். அந்த மனதில் அவர் தெரிவித்திருப்பதாவது, என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் தன்னுடைய வீட்டு மாடியில் கூண்டு அமைத்து 50க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார். அந்த புறாக்கள் எங்களுடைய வீட்டருகே வந்து நாள்தோறும் எச்சம் […]
ஜாம்பிகளாக மாறும் புறாக்கள்..!! பிரிட்டனில் பரவும் கொடிய நோய்..!! மனிதர்களுக்கும் ஆபத்தா..? அதிர்ச்சி

You May Like