ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட உள்ள படங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.ஆர்.ஆர். , இரவின் நிழல் படங்கள் பரிந்துரைக்கப்படவில்லை.
95 வது ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட உள்ள திரைப்படங்கள் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது திரைப்பட சங்கத்தின் தேர்வுக்குழு பங்கேற்று படங்களை தேர்வு செய்தனர்.
பல்வேறு மொழிகளில் இருந்து சிறந்த 13 திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி ஆஸ்கக்கு பதாய் தோ, ராக்கெட்டரி , ஜுன்ட் , பிரம்மாஸ்தரா, காஷ்மீர் பைல்ஸ் ,அனெக் ஆகிய ஆறு படங்களும் தமிழில் இரவின் நிழல் , தெலுங்கில் ஆர்ஆர்ஆர் ஸ்தலம் ஆகிய இரு படங்கள் அறிவிக்கப்பட்டது. மலையாளத்தி் அறியிப்பு என்ற படம் , அசாம் மொழியின் செம்கோர் என்ற படம் பெங்காலியில் அபராஜிதோ என்ற படம் என மொத்தம் 13 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த திரைப்படங்களில் இருந்து செலோ ஷோ என்ற குஜராத்தி திரைப்படமும் தேர்வானது. சிறந்த சர்வதேச திரைப்பட ஆஸ்கருக்கான பரிந்துரைக்கப்படட படங்களின் பிரிவில் இந்திய சார்பில் அனுப்பத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தி படம் பான் நிலன் என்பவர் இயக்கி ஒரு சிறுவனுக்கும் சினிமாவுக்குமான பிணைப்பை பற்றி பேசும் படமாக உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.