fbpx

’’இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா..!! வெப்பநிலை மேலும் அதிகரிக்குமாம்..!! வானிலை மையம் அலெர்ட்..!!

சென்னை உட்பட 13 இடங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகமாக பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது.

சென்னை, வேலூர் உள்பட 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவாகியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். அதிகபட்சமாக வேலூரில் 106.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், திருத்தணியில் 106.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானது. சென்னையில் 102.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

சேலம் மற்றும் தருமபுரியில் 100 டிகிரி வெப்பம் காணப்பட்டது. வளிமண்டலத்தில் தொடர்ந்து வறண்ட காற்று நிலவுவதால், இன்றும் நாளையும் இரண்டில் இருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், சிறியவர்கள், பெரியவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Chella

Next Post

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்திற்கு தடை..!! மீறினால் குண்டர் சட்டம்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் எச்சரிக்கை..!!

Thu May 18 , 2023
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால், அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அளவில் மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிக்க கட்டணம் இல்லாத 10581 […]
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்திற்கு தடை..!! மீறினால் குண்டர் சட்டம்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் எச்சரிக்கை..!!

You May Like