fbpx

குட்கா வழக்கு.. சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி.. முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு சிக்கல்..

குட்கா வழககில் வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது..

கடந்த 2016ஆம் ஆண்டு செங்குன்றம் குடோனில் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்களுடன் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில், தடையை மீறி குட்கா விற்பனை செய்ய பல உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது அம்பலமானது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே. ராஜேந்திரன், ஜார்ஜ், எஸ்.பி விமலா, கலால்துறை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையாக வைத்து அவர்களை நேரில் அழைத்து விசாரணையும் நடத்தினர்.

குட்கா வழக்கு..! முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் மீது வழக்குப்பதிவு? தமிழக அரசுக்கு சிபிஐ அவசர கடிதம்..!

இதையடுத்து சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக சம்பாதித்த 639 கோடி ரூபாயை பல மாநிலங்களில் அசையும், அசையா சொத்துகள் வாங்கிருப்பது கண்டறியப்பட்டது..

இதனிடையே குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில், அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் குட்கா வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது.. குறிப்பாக உயர் பொறுப்பு வகித்தவர்கள் என்பதால் அரசு தரப்பில் அனுமதி பெற்ற பின்பு தான் வழக்குப்பதிவு செய்ய முடியும் என்ற அடிப்படையில் சிபிஐ தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் தற்போது தமிழக அரசு இந்த அனுமதியை வழங்கி உள்ளது.. இதன் மூலம் குட்கா வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், பி.வி. ரமணா உள்ளிட்ட 12 பேரை வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு அனுமதி கிடைத்துள்ளது.. எனவே குட்கா வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது..

Maha

Next Post

வரும் 25-ம் தேதி.. இலவச சைக்கிள் திட்டம்.. தமிழக அரசு வெளியிட்ட குட்நியூஸ்..

Sat Jul 23 , 2022
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 25-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதால், தமிழக அரசு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி புரிய பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக, தமிழக அரசின் இலவச மிதிவண்டித் திட்டம் […]
முதல்வருக்கு உடல்நலக்குறைவு..! அரசு நிகழ்ச்சிகள் திடீர் ரத்து..! மருத்துவர்கள் சொன்ன அட்வைஸ்..!

You May Like