fbpx

சோசியல் மீடியாவில் வாலிபர்களுடன் பழக்கம்..!! 13 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர்..!! பாய்ந்தது போக்சோ..!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்த நிலையில், அதன் மூலம் சில வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், அந்த மாணவியை தங்கள் காம வலையில் விழ வைத்து, அவர்கள் தொடர்ந்து பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி மாலை சிறுமி வீட்டில் இருந்து திடீரென மாயமாகியுள்ளார். இரவு முழுவதும் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், மறுநாள் காலை, பட்டணம் கிராமம் அருகே சிறுமியை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்த போது, 4 வாலிபர்கள் தன்னை அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்தது ஊரல் கிராமத்தை சேர்ந்த தனசேகர் (19), அவரது அண்ணன் திருநாவுக்கரசு (20), முரளி (23), பிரகலாதன் (24) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : பண்ணை வீட்டில் 3 நாட்களாக அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம்..!! சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் புகார்..!!

English Summary

Being active on social media has made him familiar with some teenagers. eventually,

Chella

Next Post

தீபாவளிக்கு 4 நாட்கள் லீவு.. முன்கூட்டியே சம்பளம்..!! பண்டிகைய கொண்டாடுங்களே..

Fri Oct 18 , 2024
It has been reported that if the Tamil Nadu government grants 4 consecutive days of holiday on the occasion of Diwali, the government employees are likely to get their salaries early.

You May Like