இந்தியாவின் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரும் இன்றும் நாளையும் ஆலங்கட்டி மழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில்,இமாச்சலப் பிரதேசத்தில் மே 23 ஆம் தேதியும், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மே 23 மற்றும் 24 தேதிகளில் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும். மேலும் ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லியில் மே 24 உத்தரகாண்ட், ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.