டிசம்பர் 4-ம் தேதி ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டில் இருவரும் பிசியாக உள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரத்தில் உள்ள ஈஃபில் டவர் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோபுரத்தின் முன்பு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். காதலர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படும் பாரிஸ் நகரத்தில் காதல் சின்னமாக கருதப்படும் ஈஃபில் கோபுரம் முன்பு காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்துவது காதலுக்கான மிகப்பெரிய பரிசாக பார்க்கப்படுகின்றது.
டிசம்பர் 4்ம்தேதி திருமணம் செய்ய உள்ள ஹன்சிகா மோத்வானி தனது வருங்கால கணவருடன் அழகான ரொமான்டிக் போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தலத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நெருங்கிய நெடுங்கால நண்பரான சோஹைல் கத்தூரியா என்ற பிஸ்னஸ் மேனை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இருவரும் சேர்ந்து 2020ல் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நடத்தி வந்தனர். இதையடுத்து இவர்களின் நட்பு காதலாகி இருவரும் தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இதற்கான நிச்சயதார்த்த நிகழ்வு பாரீசில் நடந்துள்ளது.
ஈபில் டவர் முன்பு சோஹைல் ’’மேரி மீ’’ என்ற வாசகத்தின் முன்பு மண்டியிட்டவாறு காதலை வெளிப்படுத்த… அவர் கையால் ஹன்சிகா மோத்வானிக்கு மோதிரம் அணிவிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மற்றொரு புகைப்படத்தில் நெருக்கமாக கைத்தாங்கலாக சோஹைல் பிடித்திருக்க வெட்கத்தில் சிரிக்கின்றார் ஹன்சிகா மோத்வானி…