fbpx

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி……! உதவித்தொகை தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்……!

ஆண்டுதோறும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நடப்பு கல்வி ஆண்டில் அறக்கட்டளையின் அறங்காவலர் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் விண்ணப்பிக்க விண்ணப்பம் இருக்கின்ற மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் படிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக எழுதிய தேர்வில் 80 சதவீதம் மதிப்பெண் பெற்றெடுக்க வேண்டும் மாணவர்களின் குடும்ப வருமானம் ஒரு லட்சத்திற்கு கீழே இருக்க வேண்டும் இந்த தகுதி இருக்கும் மாணவ, மாணவிகள் https://images.assettype.com/kalkionline/2023-06/0a7f2ec6-aa82-481b-baae-9cfd3118853c/Kalki_Trust_Form.pdf என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதோடு உரிய ஆவணங்களை இணைத்து கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை கீதம் முதல் மாடி நம்பர் 14 நான்காவது பிரதான சாலை கஸ்தூர்பா நகர் அடையாறு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Next Post

12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு வெளியான குட் நியூஸ்…..! விண்ணப்ப தேதி நீட்டிப்பு…..!

Fri Jun 30 , 2023
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் தான் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் சேர விண்ணப்பம் செய்து வருகிறார்கள் இந்த சூழ்நிலையில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட படிப்புகளில் நேரடியாக 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்யும் தேதி நீட்டிக்கப்பட்டதாக காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி தெரிவித்திருக்கிறது. பாலிடெக்னிக், பிஎஸ்சி, கணிதம் உள்ளிட்டவற்றை முடித்த மாணவர்கள் பி இ, பி […]

You May Like