பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் வசித்து வந்த 16 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததால் சிறுமி ஒரு கட்டத்தில் கருவுற்றுள்ளார். சிறுமி கருவுற்றதை அடுத்து அந்த இளைஞர் சிறுமியைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளார். ஆனால், கருவுற்ற சிறுமி தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு இளைஞரும் அவரது குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், சிறுமி தொடர்ந்து இளைஞனுக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், இருவருக்கும் மோதல் வெடித்துள்ளது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த இளைஞர் சிறுமியை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார். மேலும், இளைஞர் தன் பெற்றோருடன் சேர்ந்து சிறுமியின் பெற்றோரை வீட்டுச் சிறையில் வைத்துள்ளார்.
இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, இளைஞர் குடும்பத்திடம் இருந்து தப்பிய பெற்றோர் முன்னதாக காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் தந்தை அளித்த சாட்சியங்களின்படி அந்த இளைஞர் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.