fbpx

’நிறைய குழந்தைகளை பெற்றுக் கொண்டால் பிரதமர் வீடு கட்டிக் கொடுப்பார்’..!! 8 குழந்தைகளை பெற்ற பாஜக அமைச்சர் கருத்து..!!

நீங்கள் நிறைய பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிரதமர் மோடி வீடு கட்டிக்கொடுப்பார் என ராஜஸ்தான் அமைச்சர் பாபுலால் பேசியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் பழங்குடியின வளர்ச்சித்துறை அமைச்சர் பாபுலால் கார்டி நேற்று உதய்ப்பூரில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர் பாபுலால் கார்டி, “பசியுடனும், வீடு இல்லாமலும் யாரும் உறங்கக்கூடாது என்பது பிரதமர் மோடியின் கனவாகும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நீங்கள் நிறைய பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிரதமர் மோடி வீடு கட்டிக்கொடுப்பார். வேறு என்ன பிரச்சனை உங்களுக்கு?” என்றார். உதய்ப்பூர் மாவட்டம் ஜோடல் தொகுதியில் வெற்றிபெற்ற அமைச்சர் பாபுலாலுக்கு 2 மனைவிகள் மூலம் 4 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

ஷாக்கிங்..!! கிரிக்கெட் மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்த வீரர்..!! தொடரும் மாரடைப்பு..!!

Wed Jan 10 , 2024
கிரிக்கெட் போட்டியின் போது வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவரின் பெயர் விகாஸ் நேகி. 34 வயதான இவர், டெல்லியில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். நொய்டாவின் செக்டார் 135ல் கட்டப்பட்ட புதிய மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் போட்டி மேவரிக்-11 மற்றும் பிளேசிங் புல்ஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. மேவரிக்-11 இன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அந்த அணியின் பேட்ஸ்மேன்களான உமேஷ் […]

You May Like