fbpx

”நாங்க அப்படி இருக்குறத என் வீட்டுக்கு வந்து பார்த்தியா”..? பயில்வானை பந்தாடிய கீர்த்தி பாண்டியன்..!!

சினிமா பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்து நேரில் பார்த்ததை போல தான் கேள்விப்பட்டதை எல்லாம் வீடியோவாக பேசி அதை யூடியூப் சேனலில் போட்டு பணம் சம்பாதித்து வரும் பயில்வான் ரங்கநாதனை, பிரஸ் மீட்டில் நடிகை கீர்த்தி பாண்டியன் விளாசி எடுத்துள்ளார்.

சமீபத்தில் தான் நடிகர் அசோக் செல்வனுக்கும் கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடைபெற்றது. அதற்குள் இருவருக்கும் இடையே வீட்டிலும் வெளியேவும் சண்டை என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். அசோக் செல்வன் அழகாக இருக்கிறார் என்றும் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை போய் ஏன் திருமணம் செய்துக் கொண்டார் என ஏகப்பட்ட பாடிஷேம் ட்ரோல் மற்றும் நிறவெறி கமெண்ட்டுகள் குவிந்தன. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால், இந்த வாரம் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள கண்ணகி மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி உள்ள சபா நாயகன் உள்ளிட்ட படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்நிலையில், சமீபத்தில் கண்ணகி படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கீர்த்தி பாண்டியனிடம் பயில்வான் ரங்கநாதன் வழக்கம் போல விவகாரமாக பேசிய நிலையில், வாங்கிக் கட்டிக் கொண்டார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பயில்வான் ரங்கநாதன், வீட்டில் தான் இருவரும் சண்டை போடுறீங்கனா பட ரிலீஸிலும் ஏன் இப்படி சண்டை போடுறீங்க என கேட்டுள்ளார். உடனடியாக கொந்தளித்த கீர்த்தி பாண்டியன், “என் வீட்டுக்கு வந்து நீ பார்த்தியா என்றும் எங்கள் இருவருக்குள் சண்டை எப்போது வந்தது என்றும் கேள்வி எழுப்பி பயில்வான் ரங்கநாதனை பந்தாடினார்.

இப்படி தொடர்ந்து அடி வாங்கினால் பயில்வான் ரங்கநாதன் போன்ற நபர்கள் இப்படி பேசவே மாட்டார்கள் என கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் ரசிகர்கள் அடித்து வருகின்றனர். அதே சமயம் பயில்வான் ரங்கநாதன் இந்த விஷயத்தை வேறு விதமாக டீல் செய்வார் என்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றன.

Chella

Next Post

’எல்லாம் சிறப்பா பண்ணிட்டீங்க’..!! ’மிகப்பெரிய சேதம் தவிர்ப்பு’..!! தமிழ்நாடு அரசை பாராட்டிய மத்திய குழு..!!

Thu Dec 14 , 2023
தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதால் மிகப்பெரிய வெள்ள சேதம் தடுக்கப்பட்டதாக மத்திய குழு தெரிவித்துள்ளது. வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்துள்ளது. அவர்கள் இன்று முதல்வர் முக.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளனர். நேற்று முதல்நாள் முதல் கட்ட ஆய்விற்கு பின் பேசிய மத்திய குழு, “2015ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பான முறையில் செய்துள்ளது. மாநில அரசு எடுக்கும் முயற்சியில் […]

You May Like