fbpx

நீங்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளீர்களா..? அப்படினா செம குட் நியூஸ்..!!

இன்றைய காலகட்டத்தில் எதிர்கால வருமானத்திற்காக பலரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம் மற்றும் வங்கி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அதன்படி, தற்போது சுகன்யா சம்ரிதி யோஜனா, பிபிஎஃப் மற்றும் கிஷான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் இணைந்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு முறை மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி தொகையை உயர்த்தி வருகிறது. அந்தவகையில், தற்போது சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்த உள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தலாம் என்றும் எவ்வளவு வட்டி உயர்கிறது என்பது குறித்த தகவலும் வெளியாகும் என்பதால், இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Chella

Next Post

அடுத்த ஜாக்பாட்...! மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு...!

Mon Sep 18 , 2023
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரண உயர்வு நவராத்திரிக்கு முன்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறும் மத்திய அமைச்சரவையின் கூட்டத்தில், ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரண உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு அரசு அவர்களுக்கு ஒரு பெரிய பரிசை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொடர்பான முறையான அறிவிப்பை மத்திய […]

You May Like