fbpx

மகளிர் விடுதியை இன்னும் பதிவு செய்யவில்லையா..? இந்த தேதி தான் கடைசி..!! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!!

சென்னையில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்களை நவம்பவர் 15ஆம் தேதிக்குள் பதிவு செய்யாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத விடுதிகள், https://tnswp.com என்ற இணையதளம் மூலமாகப் பதிவு செய்யலாம்.

அதில், அறக்கட்டளை பதிவுப் பத்திரம், சொந்தக் கட்டிடம் குறித்த தகவல் அல்லது வாடகை ஒப்பந்தப் பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச் சான்று, தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று, சுகாதாரச் சான்று ஆகிய ஆவணங்களுடன் அக்.30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வரும் நவ.15ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

உலகின் மிக ஆபத்தான சிவப்புத் தேள் கடிக்கு புதிய சிகிச்சை...! மருந்தை கண்டுபிடித்த இந்தியா...!

Thu Nov 2 , 2023
இந்திய சிவப்புத் தேள் கடிக்கு மேம்பட்ட புதிய சிகிச்சை உருவாக்கபட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் தேள் இனப்பெருக்கம் ஒரு கடுமையான பிரச்சினையாகும். இந்திய சிவப்புத் தேள் உலகின் மிகவும் ஆபத்தான தேள்களில் ஒன்றாகும். இந்திய சிவப்புத் தேள் விஷத்தால் தூண்டப்பட்ட நச்சுத்தன்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிகுறிகளைத் தடுப்பதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழுவும், […]

You May Like