fbpx

’ஜெயிலுக்கு போறேன்னு தெரிஞ்சும் அவரு உதவி பண்ணல’..!! பிரபல நடிகரை திட்டித் தீர்த்த ரவீந்தர்..!!

சுமார் 16 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் மீது புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்துள்ள ரவீந்தர், தான் சிறைக்கு செல்லும் நிலையில், நடிகர் ராஜ்கிரணிடம் உதவி கேட்டும் அவர் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளரான ரவீந்தர், 4 படங்களை தயாரித்து வருவதாகவும், அதில் ”பல நடிகர்களுக்கு சம்பளம் மற்றும் அட்வான்ஸ் கொடுத்த நிலையில் தான் தன்னிடம் வாங்கிய 16 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என அவர் மீது புகார் அளித்ததாக அவரே பேட்டியில் கூறியுள்ளார். ஆனால், ஈஸ்வரன் பட தயாரிப்பாளர் பணத்தை வாங்கி எந்த நடிகருக்கு கொடுத்தேன் என ஏதாவது சான்று அவரிடம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். படம் எடுப்பதற்காக பலரிடம் ஃபைனான்ஸ் வாங்கியதும் கடனில் இருப்பதும் உண்மை தான். நடிகர் ராஜ்கிரண் ஒரு படத்தில் நடிக்க பல லட்சம் ரூபாயை அட்வான்ஸாக கொடுத்துள்ளேன்.

இக்கட்டான சூழலில் என்னை கைது செய்து உள்ளே வைக்கப் போவதை அறிந்து கொண்டு நடிகர் ராஜ்கிரணிடம் அட்வான்ஸாக கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும் படி கேட்டேன். ஆனால், அவர் திருப்பித் தரவில்லை. ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸாக வாங்கிய தொகையை நடிகர்கள் திருப்பித் தர வேண்டிய அவசியம் இல்லை தான். ஆனால், தயாரிப்பாளர் தலையே ஆபத்தில் இருக்கும் போது, அவசரத்துக்கு கேட்கும் போதும் அவர் கொடுக்காதது தனக்கு வருத்தம் தான்” என்றும் ரவீந்தர் பேசியுள்ளார்.

Chella

Next Post

நெகிழ்ச்சி!… போருக்கு செல்லும் முன் திருமணம் செய்து கொண்ட ராணுவ தம்பதி!

Fri Oct 13 , 2023
 நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதல்கள் தீவிரமாகி வரும் நிலையில், முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட ரிசர்விஸ்ட் எனப்படும் வீரர்களை போரில் பங்கேற்க இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த முன்னாள் ராணுவ வீரர்கள், விடுமுறை சென்றிருந்தவர்கள் என கூடுதலாக 300,000 பாதுகாப்புப் படையினருக்கு இஸ்ரேல் உத்தரவிடப்பட்டது. இப்போரில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் […]

You May Like