என் வாழ்க்கையில் எது நடந்தாலும் விஜய் தேவரகொண்டாவிடம் ஆலோசனை கேட்டுதான் செய்வேன் என்றும் அவர் என் வாழ்க்கையில் முக்கியமான ஒருவர் என்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில் தற்போது, நேர்காணல் ஒன்றில் பேசிய ராஷ்மிகா, என் வாழ்க்கையில் எது நடந்தாலும் விஜய் தேவரகொண்டாவிடம் ஆலோசனை கேட்டு தான் செய்வேன். நான் என்ன சொன்னாலும் அதற்கு ஆம் என்று சொல்லக்கூடியவர் கிடையாது, நல்லது கெட்டதை அறிந்து சொல்வார். என் வாழ்நாளில் எல்லோரையும் விட எனக்கு அவர் ஆதரவாக இருக்கிறார், நான் உண்மையில் மதிக்கும் ஒரு நபராக அவர் இருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.