மருத்துவமனையில் அவசரபிரிவில் சிகிச்சை தீவிரம்
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் கைது செய்யப்பட்ட மடாதிபதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள பிரிஹன் என்ற மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு(60). இவர் மடத்தின் பரமரிப்பில் பள்ளிகள் , விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களுக்கு பாலியல் தொல்லை தருவதாக பள்ளி மாணவர்கள் 2 பேர் இவர் மீது புகார் அளித்தனர்.. இது தொடர்பாக வழக்கு செய்யப்பட்டது. போலீசார் 6 நாட்கள் கழித்து இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூடி மடாதிபதி உள்பட 5 பேரை வியாழன் அன்று இரவு கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. உடனடியாக சித்ரதுர்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ’’ முருக சரணரு , மிகவும் மென்மையான இதயம் கொண்டவர். திடீரென பிரச்சனை ஏற்பட்டதும் அவரால் தாங்க முடியாமல் இது போல ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தாவணகெரே மாவட்டத்தில் உள்ள இருதய நோய் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சைக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வந்து ஆலோசித்த பின்னர் அடுத்த கட்ட நடிவடிக்கை மேற்கொள்ளப்படும் ’’ என்றார்.
சித்ரதுர்காவில் சிகிச்சை பெற்று வரும் மடாதிபதி , சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. எனவே அவரை விமானம் மூலம் பெங்களூரு அழைத்து வந்து ஜெயதேவா மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற தேவையான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.