fbpx

டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம், தமிழ்நாட்டை ஒட்டிச் சென்றதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழையை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து, ஆந்திராவை நெருங்கியவுடன் நெல்லூர், ஓங்கோல் உள்ளிட்ட இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

புயல் கரையை கடந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் 3 நாட்களுக்கு பிறகு வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. இருப்பினும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர் வசதியின்றி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

’என் அப்பா அந்த பழக்கத்திற்கு அடிமை’..!! ’நடுத்தெருவில் நின்றேன்’..!! ’குடும்பமே எதிரியாக மாறின’..!! நீலிமா ராணி வேதனை..!!

Thu Dec 7 , 2023
சுமார் 31 ஆண்டுகளாக நடிகையாக பயணித்து வரும் நீலிமா ராணி பல திரைப்படங்களில் தங்கையாக, அக்காவாக, நாயகியின் தோழியாக நடித்துள்ளார். இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ருத்ரன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்திருந்தார். நடிகர், நடிகைகள் என்றாலே லட்சத்தில், கோடிகளில் சம்பளம் பெறுபவர்கள். ஆகவே, அவர்களுடைய வாழ்க்கை மிகப்பெரிய சொகுசான வாழ்க்கை என்று நம்மில் பலருக்கு உள்ள அந்த ஒரு பிம்பத்தை உடைப்பது போல அமைந்து […]

You May Like