கனமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெறவிருந்த டிப்ளமோ பட்டயத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால், தமிழ்நாட்டின் ஒரு சில மாநிலங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த டிப்ளமோ கல்லூரி பட்டயத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கான தேதி பின்னர் dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.