fbpx

திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!! வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டில் நாளை (டிச.6) முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வரும் டிசம்பர் 9ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் 34 செ.மீ. மழையும், ஆவடியில் 28 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தெற்கு ஆந்திரா கடற்கரையை பாபட்லாவிற்கு அருகே 4 மணி நேரத்தில் தீவிர புயலாகக் கரையைக் கடக்கக் கூடும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

புதுக்கோட்டையில் அதிர்ச்சி..!! பட்டாசு தயாரிப்பு ஆலையில் வெடிவிபத்து..!! நடந்தது என்ன..?

Tue Dec 5 , 2023
புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டி அடப்பன் வயல் அருகே உள்ள கல்லுப்பட்டறை பகுதியில் மூர்த்தி என்பவரது வாணப்பட்டறை செயல்பட்டு வருகிறது. இதில், இன்று காலை தீவிபத்து ஏற்பட்டு வெடி பொருட்கள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் கட்டடம் தரைமட்டமானது. மேலும், அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதில் உரிமையாளர் மூர்த்தி என்பவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தீ விபத்து சம்பந்தமாக திருக்கோகர்ணம் காவல்துறையினர் […]

You May Like