fbpx

தமிழ்நாட்டில் கனமழை தொடரும்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிகை..!!

தென்மாநில பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. கேரள கடலோர பகுதியை ஒட்டிய, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.இதன் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில், வரும் 8ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10 முதல் 16 மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் அவ்வப்போது, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்துார், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது

Chella

Next Post

குட் நியூஸ்..!! டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்..!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Tue Nov 7 , 2023
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வின் முடிவுகளை வெளியிடக் காலதாமதம் ஆவதாக வெளிவந்த பத்திரிகை செய்திகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஎன்பிஎஸ்சியால் குரூப் 2, 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய இரு […]

You May Like