fbpx

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!! இந்த லிஸ்ட்ல உங்க மாவட்டமும் இருக்கா..?

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, கடலூர், திருவாரூர், திருச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் தேங்கிய மழைநீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி, இன்று (செப்.17) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

மகள் உயிருடன் இருக்கும் போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தந்தை….! இறுதியில் நடந்த ட்விஸ்ட்….!

Sun Sep 17 , 2023
பொதுவாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மட்டுமல்ல, ஆண் பிள்ளைகளை பெற்றவர்களும் தங்களுடைய பிள்ளைகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பான விஷயம்தான். ஆனால், அனைத்து விஷயங்களும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைப்பது மிக, மிக தவறு. அவரவருக்கு என தனி விருப்பு, வெறுப்பு இருக்கத்தான் செய்யும். அதை மதிக்காமல் ஒரு சிலர் செய்யும் செயலால் பல்வேறு இன்னல்கள் வந்து சேர்க்கிறது. அந்த வகையில், தெலுங்கானாவில், […]

You May Like