fbpx

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை..!! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (ஜனவரி 2) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (ஜனவரி 3) அதே பகுதிகளில் நிலவுகிறது.

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாளை (ஜனவரி 4) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 5ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 6ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 7ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chella

Next Post

ரயில்வே தட்கல் டிக்கெட் புக்கிங் அறிமுகம் செய்தவர் யார் தெரியுமா?… அட இந்த மாநில முதல்வரா?

Wed Jan 3 , 2024
பிகார் முதல்வர் நிதிஷ்குமார் 1951 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி, பிகார் மாநிலம் பக்தியார்பூரில் கவிராஜ் ராம் லக்கன்சிங் மற்றும் பரமேஸ்வரி தேவி தம்பதிகளுக்கு ஆயுர்வேத மருத்துவராக பணியாற்றி வந்தார். பாட்னாவில் படித்து மெக்கானிக்கல் என்ஜினியர் பட்டம் பெற்ற நிதிஷ், அரசியலுக்கு வருவதற்கு முன் மாநில மின்சார வாரியத்தில் பணிபுரிந்தார். அரசியலில் நாட்டம் கொண்டிருந்த நிதிஷ்குமார் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, எஸ்.என்.சின்ஹா, கர்பூரி தாகுர் […]

You May Like