fbpx

ஹலோ மேடம்..!! ’இனியாவது மாணவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்’..! ஆசிரியைக்கு மாணவி அனுப்பிய மெசேஜ்..!

”இனி மாணவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று தன்னுடைய ஆசிரியருக்கு மாணவி ஒருவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

கற்கும் திறன் என்பது ஒவ்வொரு மாணவருக்கும் வேறுபடும். சிலர் பாடங்களை வேகமாக உள்வாங்கிக் கொள்வார்கள். சிலருக்கு கூடுதல் கவனம் தேவை. ஆனால், இங்கு அனைவருக்கும் ஒன்றுபோல கற்பித்துவிட்டு, அனைத்து மாணவர்களிடமும் ஒரே மாதிரி ரிசல்ட்டை எதிர்பார்ப்பதுதான் அதிகம் நடக்கிறது. அந்த எதிர்பார்ப்புகள் தகரும்போது குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களின் மீது வசை சொற்கள் விழும். அந்தவகையில் மாணவி ஒருவர் தன்னுடைய ஆசிரியரின் இன்ஸ்டா ஐடி-யை கண்டுபிடித்து ஒரு செய்தியைப் பதிவிட்டுள்ளார்.

ஹலோ மேடம்..!! ’இனியாவது மாணவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்’..! ஆசிரியைக்கு மாணவி அனுப்பிய மெசேஜ்..!

அதில், “ஹலோ மேடம், 2019 – 2020ஆம் ஆண்டில் உங்களிடம் 10ஆம் வகுப்பு பயின்ற மாணவிகளில் நானும் ஒருவர். இந்த மெசேஜை உங்களுக்கு அனுப்புவதற்கு காரணம், என்னால் படிப்பில் தேர்ச்சி பெற முடியாது என ஒவ்வொரு முறையும் நீங்கள் என்னை மட்டம் தட்டித் தாழ்த்தியது தான். இன்று நான் 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றுள்ளேன். அதுமட்டுமல்லாமல் நான் விரும்பிய பல்கலைக்கழகத்தில், எனக்குப் பிடித்த பாடத்தையே பயில்கிறேன். இது உங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான மெசேஜ் அல்ல, என்னால் முடியும் என உங்களிடம் காட்ட அனுப்பப்பட்ட மெசேஜ். இனி மாணவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், குறிப்பாக, உங்களின் உதவி தேவைப்படும் மாணவர்களிடம் கனிவாக இருங்கள்” என அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவு ட்விட்டரில் தற்போது வைரலாகி வருகிறது.

https://twitter.com/hasmathaysha3/status/1550410781983854592?s=20&t=2E-cpd2EsScYWv9MQCYbmg

Chella

Next Post

நீங்க மட்டுந்தான் செய்வீங்களா, நாங்களும் செய்வோமில்ல?! சிறுவனை கடத்தி குடும்பம் நடத்திய இளம்பெண்..!

Thu Jul 28 , 2022
8 ஆம் வகுப்பு மாணவனை கடத்தி வாடகை வீட்டில் தங்கி, அவரை பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடா பகுதியை சேர்ந்தவர் அந்த இளம்பெண்(30). அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவனை கடத்திச் சென்று பாலியல் […]

You May Like