fbpx

பருவக்கால பழமான ஆரஞ்சு பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் இதோ!… சரும பிரச்சனைக்கும் தீர்வு!…

சிட்ரஸ் பழமான ஆரஞ்சில், உடலின் முக்கிய பாதுகாப்பு அமைப்பான நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் திறன் உள்ளது. இதன் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

கோடை சீசன் என்றாலும் அதன் தாக்கத்தை எதிர்க்கொள்ளும் வகையில் உணவு மற்றும் பழ வகைகளும் உள்ளன. அதிலும் சிட்ரஸ் நிறைந்த பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. ஆரஞ்சு பழத்தில் அதிகளவில் வைட்டமின் சி அடங்கியுள்ளது. கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்ற நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகியவையும் இதில் உள்ளது. இந்தப் பொட்டாசியம் இதயத்தின் சுவர்கள் தடிப்பதை தவிர்க்கிறது. எனவே ஆரஞ்சுப் பழத்தை அடிக்கடி எடுத்துக்கொண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. தோல் மற்றும் கண் ஆரோக்கியம் மேம்படும்: வெய்யில் காலத்தில் உண்டாகும் அக்கி, தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாயிடு போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது. மேலும்ஆரஞ்சு கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பூஜ்ஜிய கலோரி கொண்ட பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழம் தேவையற்ற கலோரிகளை எரிக்கும் சக்தியை கொண்டுள்ளது. எனவே, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் உங்களது அன்றாட உணவில் ஆரஞ்சை பழமாகவோ அல்லது ஜுஸாகவோ சாப்பிடலாம். சளி, ஆஸ்துமா, நுரையீரல் கோளாறு, சுவாசக் கோளாறு, காச நோய் போன்ற நோய்களுக்கு ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டு வந்தால் விரைந்து குணம் பெறலாம். செரிக்கும் சக்தியும், பசியையும், அதிகப்படுத்துவதுடன் புண் ஆன குடலை விரைந்து சரி செய்கிறது. அழிந்த திசுக்களைப் புதுப்பிக்கிறது. இரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களின் உன்னத உணவாக செயல்பட்டு புது இரத்தம் உற்பத்தி செய்ய ஆரஞ்சு பழம் பெரிதும் உதவுகிறது.

கர்ப்பிணிகள் இப்பழச் சாற்றை அதிக அளவில் சாப்பிட்டால் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். அதுமட்டுமல்லாமல் கருவில் உள்ள குழந்தையின் தோல் மற்றும் கண் பார்வை ஆரோக்கியமாக இருக்கும். உடல் சூடு, வெட்டைச்சூடு, மூல வியாதி போன்றவற்றிற்கும், சிறு நீர் எரிச்சல், சிறுநீர்க் கோளாறுகளுக்கும் இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.

Kokila

Next Post

மத்திய அரசின் ரிசர்வ் போலீஸ் படையில் 10, 12 ஆம் வகுப்பு ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு 9212 வேலை வாய்ப்புகள்!

Fri Mar 17 , 2023
மத்திய அரசின் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி சி.ஆர்.பி.எஃப் இல் காலியாக உள்ள 9,212 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ரிசர்வ் போலீசில் ஆண்களுக்கு 9105 இடங்களும் பெண்களுக்கு 107 காலியிடங்களும் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் ரிசர்வ் போலீஸில் […]

You May Like