fbpx

கிராம்பு மற்றும் கிராம்பு எண்ணெய், தேநீரில் அடங்கிய மருத்துவ பயன்கள் இதோ!…

கிராம்பில் அடங்கியுள்ள மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு கிராம்பும் ஒவ்வொரு நோய் எதிர்ப்பு சக்தியாக உள்ளது. இந்திய சமையலில் அதன் தனித்துவமான சுவைக்காக பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாக “கிராம்பு” உள்ளது. இது தவிர, இன்னும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய ஒரு மூலிகையாகவும் கிராம்பு வலம் வருகிறது. சளி, இருமல், குமட்டல், செரிமானக் கோளாறுகள் மற்றும் காய்ச்சல் போன்ற உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதில் இது சிறந்ததாகவும் உள்ளது. ஆயுர்வேதத்தில் பல குணப்படுத்தும் கலவைகள் உள்ளன. அதில் கிராம்பை அதன் முக்கிய பொருட்களில் ஒன்றாகப் பயன்படுத்துகின்றது.

கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது. கிராம்பு எண்ணெய் ஒரு சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. குறிப்பாக எறும்பு மற்றும் அந்துப் பூச்சிகளை விரட்டுகிறது. எனவே உங்கள் அலமாரிகள் போன்றவற்றில் இந்த பூச்சிகளின் தொந்தரவு ஏற்பட்டால் சில கிராம்பு களை ஒரு காட்டன் துணியில் கட்டி போட்டு விட்டால் போதும் பூச்சிகள் எல்லாம் ஓடிவிடும். கிராம்பு சீரண என்ஜைம்களை அதிகரித்து சீரண சக்தியை தூண்டுகிறது. வாய்வு, நெஞ்செரிச்சல், குமட்டல், எதுக்களித்தல் போன்ற பிரச்சினைகளையும் குறைக்கிறது.

கிராம்பு, இலவங்கப்பட்டை மற்றும் சில முழு ஏலக்காய்களை கொண்டு தயார் செய்யப்பட்ட தேநீர் காய்ச்சல் மற்றும் நெரிசலின் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது. காலரா தண்ணீரால் பரவக் கூடிய நோயாகும். இதனால் பேதி, வாந்தி மற்றும் இறப்பு கூட ஏற்படலாம். கிராம்பு, பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படுகிறது. அதிலும் காலரா பாக்டீரியாவிற்கு எதிராக செயல்பட்டு அதன் விளைவை குறைக்கிறது. கிராம்பில் உள்ள கூட்டுப்பொருளான பினைல்புரப்போனைடு பொருட்கள் ஆன்டி மியூட்டோஜெனிக் தன்மையை கொண்டுள்ளன. இது செல்களின் மரபணு பிறழ்வுகளை தடுத்து கேன்சர் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது. நுரையீரல் புற்று நோயை ஆரம்ப காலத்திலேயே சரி செய்ய கிராம்பு பயன்படுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது.

உணவில் கிராம்பை சேர்த்து கொண்டு வந்தால் டைப் 1 டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைக்கிறது. ஏனெனில் கிராம்பில் உள்ள பொருட்கள் இன்சுலினை தூண்டி இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது. இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் தான் அதிகம் எதிர்ப்பு சக்தியை கொடுப்பவை. உங்கள் உடலை நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாப்பது இவர்களுடைய முக்கிய வேலையாகும். இது நமக்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது. எனவே கிராம்பை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அழற்சி கிருமிகளிலிருந்து நம்மை காக்கிறது.

பல்வலி, பற் சொத்தை போன்றவற்றிற்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவராக விளங்குகிறது. இதில் உள்ள யூஜினால் வலி நிவாரணி மற்றும் ஆண்டி அழற்சி பொருட்கள் இதற்கு துணை புரிகின்றன. மேலும் பற்களை ஒரு சிமெண்ட் போன்று காக்கிறது. தலைவலி ஏற்பட்டால் கிராம்பை பொடியாக்கி பேஸ்ட் செய்து அதனுடன் ராக் சால்ட் சேர்த்து பாலுடன் கலந்து குடித்தால் போதும், உடனடியாக தலைவலி தீரும்

Kokila

Next Post

வேகமாக எடை குறைய, சீறுநீரக கல்லைக் கரைக்கும் வாழைத்தண்டு!... ஹெல்த் டிப்ஸ் மற்றும் ரெசிபிகள் இதோ!

Sat Mar 11 , 2023
உடலுக்கு மிக மிக ஆரோக்கியத்தை அளிக்கும் வாழைத்தண்டின் நன்மைகள் குறித்து இதில் காண்போம். வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் என எல்லாமே நிறைவான நன்மைகளை தரக்கூடியவை. இதன் ஒவ்வொரு பகுதியும் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகளால் நிறைந்துள்ளது. வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் செரிமானம் சீராகும். வாழைப்பழங்கள் பொட்டாசியம் மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலம். வாழைப்பூ நீரிழிவு மற்றும் வயதான எதிர்ப்பு குணங்களுக்கு நன்மை செய்கிறது வாழைத்தண்டு […]

You May Like