அதிக வட்டி முதல் மறைமுக கட்டணங்கள் வரை பல விஷயங்களை ஆன்லைன் கடன் செயலிகளில் கவனிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் கடன் பெறுவது என்பது மிக எளிதாக இருந்தாலும் அதனை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் பெறுவதற்கு முன்பு முதலில் அந்த செயலி சட்டப்பூர்வமான செயலிதானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளின் படி, வங்கிகள் மற்றும் டிஜிட்டல் செயலிகளுடன் இணைந்து செயல்பட்டால் அது தொடர்பான விவரத்தை தெரிவிக்க வேண்டும். பொதுவாக வங்கி கடன் எளிதாக பெற முடியாதவர்கள் டிஜிட்டல் கடன் பெறுவதற்கு முயற்சி செய்கின்றனர்.
இதனை பயன்படுத்தி மோசடி செயலிகள் அதிவேகமாக கடன் வழங்குவதாக கூறி அதன் பிறகு அதிகமான வட்டி வசூலிக்கின்றனர். இதனால், நீங்கள் மோசடியில் சிக்கி உங்கள் பணத்தை இழக்க நேரிடும். இந்த செயலிகளின் நிபந்தனைகள் மற்றும் விதிகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும் எனவும் கடனை திரும்ப செலுத்தும் காலம் உள்ளிட்ட அம்சங்களை கவனிக்க வேண்டும் எனவும் முடிந்த அளவிற்கு இது போன்ற செயலிகளில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.