fbpx

அதிக ரன்கள் குவிப்பு!… ஸ்டம்பிங் முறையில் அவுட்!… சச்சின், கோலியை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட்!… வித்தியாசமான சாதனை!

இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் முதல் முறையாக தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டம் இழந்ததையடுத்து வித்தியாசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

நடந்து வரும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட், இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்கள் எடுத்த நிலையில் முதன்முறையாக ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். நேதன் லியொன் பந்தில் ரூட், ஸ்டம்பிங் அவுட் ஆனார். இதன் மூலம் ஜோ ரூட் ஒரு வித்தியாசமான சாதனையை படைத்துள்ளார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த பிறகு முதல்முறையாக ஸ்டம்பிங் முறையில் ஆட்டமுழந்தவர் என்ற பட்டியலில் ஜோ ரூட் தற்போது, இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், மற்றும் விராட் கோலிக்கு முன்னே சென்றுள்ளார்.

அதாவது ஜோ ரூட் தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11,168 ரன்கள் வரை அடித்த நிலையில் முதன்முறையாக ஸ்டம்பிங் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 7419 ரன்களும், விராட் கோலி 8195 ரன்களும் எடுத்த பிறகு முதன்முறையாக இவ்வாறு ஆட்டம் இழந்து வெளியேறியுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் சந்தர்பால், இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 11,414 ரன்களுக்கு பிறகு இவ்வாறு ஆட்டமிழந்துள்ளார். இரண்டாவதாக தற்போது ஜோ ரூட் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். ஜோ ரூட் குறிப்பாக ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணிக்காக 118* ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி!... 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!

Wed Jun 21 , 2023
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலா ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடந்து பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 386 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் […]

You May Like