fbpx

இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! இனி பண மழை கொட்டப் போகுது..!!

ஜோதிடத்தில் பல்வேறு சுப யோகங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் லட்சுமி நாராயண யோகம். இந்த யோகமானது புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும். இந்த யோகம் ஒருவரது ஜாதகத்தில் இருந்தால், அவர் மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். இப்படிப்பட்ட லட்சுமி நாராயண யோகமானது மேஷ ராசியில் உருவாகவுள்ளது. ஏற்கனவே மேஷ ராசியில் சுக்கிரன் பயணித்து வருகிறார். இந்நிலையில், மே 10ஆம் தேதி புதன் மேஷ ராசியில் நுழையவுள்ளார்.

இந்த யோகம் மே 19 ஆம் தேதி வரை இருக்கும். இக்காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் நல்ல பண பலன்களையும், தொழிலில் நல்ல வெற்றிகளையும் பெறுவார்கள். இப்போது மேஷ ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் யார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 12-வது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வருமானத்தைப் பெறுவார்கள். பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். லட்சுமி தேவியில் அருளால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். உடன் பிறந்தவர்களிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 9-வது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிலுவையில் உள்ள வேலைகள் முடியும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இப்பயணம் நல்ல நிதி நன்மைகளை வழங்குவதாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 11-வது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்கள் சிறப்பான செயல்திறனால் வேலைகள் அனைத்தையும் திறம்பட முடிப்பார்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும்.

Read More : நீங்க செகண்ட் ஹேண்ட் கார் வாங்கப் போறீங்களா..? அப்படினா இந்த விஷயங்களை செக் பண்ணுங்க..!!

Chella

Next Post

Xiaomi போன் பயனர்களுக்கு எச்சரிக்கை! உடனே இந்த ஆப்பை டெலிட் செய்யவும்.. இல்லனா?

Tue May 7 , 2024
பயனர்களுக்கு ஒரு புதிய மால்வேர் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த லேட்டஸ்ட் செக்யூரிட்டி அலெர்ட் ஆனது மைக்ரோசாப்ட் டீம் வழியாக வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மாட்போனின் முழு கட்டுப்பாட்டையும் ஹேக்கர்களுக்கு வழங்கும் ஒரு புதிய மால்வேர் கண்டறியப்பட்டுள்ளது. செக்யூரிட்டி ஆய்வாளர்கள் இந்த மால்வேரை டர்ட்டி ஸ்ட்ரீம் என்று அழைக்கின்றனர். இது மைக்ரோசாப்ட் பிளே ஸ்டோரில் உள்ள சில ஆப்களில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இந்த மால்வேரை கொண்ட ஆப்கள் இதுவரை […]
ரூ.10 ஆயிரத்திற்குள் 5ஜி ஸ்மார்ட் ஃபோன்? பண்டிகை கால அதிரடி தள்ளுபடிகள்..!

You May Like