fbpx

4 மாவட்டங்களுக்கு டிசம்பர் 4ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…! எந்தெந்த மாவட்டங்கள்…!

டிசம்பர் 4ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு. ஏற்கனவே திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டஙக்ளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 4வது மாவட்டமாக சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக டிசம்பர் 4 மற்றும் 5ஆம் தேதி சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் தற்போது முன்னெச்சரிக்கை நாடவடிக்கை காரணமாக , சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை பொறுத்து, டிசம்பர் 5ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Kathir

Next Post

விஜயகாந்த் எப்படி இருக்கிறார்..? நேரில் பார்த்த நடிகர் நாசர் பரபரப்பு பேட்டி..!!

Sat Dec 2 , 2023
சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் முன்னதாக தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் நாசர், ஆர். கே.செல்வமணி, லிங்குசாமி உள்ளிட்டத் திரையுலகத்தினர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அவரால் பேச முடியாத நிலையில், குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். விஜயகாந்தை சந்தித்தப் பின்பு நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், […]

You May Like