fbpx

தமிழ்நாட்டில் இருந்து அயோத்திக்கு கொண்டு செல்லப்படும் புனித நீர்..!! எங்கிருந்து தெரியுமா..? பிரதமரின் பக்கா பிளான்..!!

ஜனவரி 19ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை மனதில் வைத்து இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். உதாரணமாக கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் பங்கேற்க 19ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். ஆனால், இந்த பயணம் முழுக்க முழுக்க அயோத்தி விழாவை மனத்தில் வைத்து பிளான் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 20ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்கிறார். அங்கே சிறப்பு பிரசாதம் அவர் வாங்கி வைப்பார். பின்னர், ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி, புனித நீராடி சாமி தரிசனம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி புனிதநீரை எடுத்துச் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. இராமாயணத்தில் ராமர்.,. ராமேஸ்வரத்தில் உள்ள ராமர் பாலம் வழியாக இலங்கை சென்றதாக கதை உள்ளது.

இதனால் அங்கே உள்ள கடல் நீர் புனிதமாக கருதப்படுகிறது. அந்த கோவில் உள்ளே இருக்கும் தீர்த்தமும் மிகவும் புனிதமாக பார்க்கப்படுகிறது. இதைத்தான் அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி எடுத்து செல்ல இருக்கிறாராம். இதற்காகத்தான் அவர் தமிழ்நாட்டிற்கு வருகிறாராம்.

Chella

Next Post

காற்றின் தரத்தில் மாற்றம்!… விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

Wed Jan 17 , 2024
கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா, காலி, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. காலநிலைக்கு ஏற்ப இந்த தன்மை அவ்வப்போது மாறலாம் எனவும் இன்று (17) வளி மாசு நிலைமை ஓரளவுக்கு குறையலாம் என நம்புவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய காற்று மாசுபாட்டால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரி […]

You May Like