ஜம்மு காஷ்மீரில் ஆரம்பமாகும் அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அமர்நாத் குகை கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்று ஆண்டுதோறும் சிவ பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையினும் இந்த பணி நிமித்தத்தை தரிசிக்க வேண்டும் என்று இந்து மக்கள் நினைப்பார்கள்.
அந்த அளவிற்கு புகழ் பெற்ற சிவாலயங்களில் நன்றாக இந்த அமர்நாத் குகை கோவில் இருக்கிறது. இந்த பாதயாத்திரைக்கு இந்த 62 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நிறைவு பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான இணையதள முன்பதிவு சென்ற ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமானது.
இந்த நிலையில், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள், எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் மத்திய உள்துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்ற வருடம் 3.45 லட்சம் பக்தர்கள் இந்த பனிலிங்கத்தை தரிசித்த நிலையில், இந்த வருடம் 5 லட்சத்தை இந்த எண்ணிக்கையை தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.