இரத்த வகையைப் பொறுத்து, ஒரு நபர் எந்த நோயாலும் பாதிக்கப்படலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் மனநல மருத்துவர் டாக்டர் ஷெல்டன் ஜாப்லோ கூறியுள்ளார்.
உங்கள் ரத்த வகையை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை பற்றி சொல்ல முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உங்கள் நரம்புகள் வழியாக ஓடும் இரத்தம், நீங்கள் யாரிடம் தானம் செய்யலாம் அல்லது பெறலாம் என்பதை மட்டும் தீர்மானிக்கவில்லை, இது உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது. A, B, AB, மற்றும் O.என நான்கு வகையான இரத்தக் குழுக்கள் உள்ளன. ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் மனநல மருத்துவர் ஷெல்டன் ஷேப்லோ நமது இரத்த வகை எவ்வாறு பல்வேறு நோய்களுக்கு நம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இதய நோய்: இரத்த வகை AB அல்லது B குரூப் கொண்டவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம். இருப்பினும், O இரத்தக் குழுவைக் கொண்டவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் சற்று குறைவு.
வயிற்று புண்: O குரூப் உள்ளவர்கள், பல சமயங்களில் புண்களால் பாதிக்கப்படலாம். வயிற்றுப் புண்கள், சரும பாதிப்புகள் ஆகியவை உண்டாகலாம். உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, முழு தானியங்கள், மீன், பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறைந்தது 40 நிமிடங்களுக்கு வழக்கமான உடற்பயிற்சி செய்யுங்கள் மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்க்கவும் டாக்டர் ஷெல்டன் ஜாப்லோ அறிவுறுத்தினார்.
பார்வை குறைபாடு: இரத்தக் குழு AB உடையவர்களுக்கு வயதாகும்போது பார்வைக் குறைபாடு இருக்கலாம். இரத்தத்தில் உள்ள புரதச் சிக்கல்கள் கூட நினைவாற்றல் குறைபாட்டை ஏற்படுத்தும்.
பக்கவாதம்: A, B இரத்த பிரிவு மக்களுக்கு இரத்தம் உறைதல் பிரச்சனைகள் இருக்கலாம். இருப்பினும், O குரூப் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை குறைவாக இருக்கலாம். இந்த வகையான பிரச்சனைகள் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
மன அழுத்தம்: A இரத்த பிரிவு கொண்டவர்கள் மன அழுத்தத்திற்கு அடிக்கடி ஆளாகிறார்கள். கார்டிசோல் ஹார்மோனின் வெளியீடு அவர்களின் உடலில் அதிகம் சுரக்கும். இதன் விளைவாக, நீங்கள் மனநல பிரச்சினைகளை எளிதில் சமாளிக்க முடியாது. மன ஆரோக்கியத்தை பராமரிக்க, வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். ஒவ்வொரு இரவும் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்” என்று ஷெல்டன் கூறினார்.
Read more: தலைமறைவாக உள்ள நித்தியானந்தா இறந்து விட்டாரா..? தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன..?