fbpx

’நீதிமன்றம் எப்படி இதை செய்ய சொல்லும்’..? சில வாரங்கள் காத்திருக்க முடியுமா..? சுப்ரீம் கோர்ட் வேதனை..!!

திருமணமான 27 வயது பெண் ஒருவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அந்த பெண் 3-வது முறையாக கர்ப்பமானார். இதையடுத்து, அந்த பெண் சில சிரமங்களை சந்திக்க தொடங்கினார். இதனால் அவர் தனது கருவை கலைக்க முடிவு செய்தார். இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் கருவை கலைக்க அனுமதி கோரினார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 9ஆம் தேதி கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கியது.

ஆனால், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவுகளை வழங்கினர். நீதிமன்றம் எப்படி கருவின் இதயத்துடிப்பை நிறுத்தும்படி கூற முடியும் என்பதை கூறி கருவை கலைக்க நீதிபதி ஹிமா கோஹ்லி அனுமதி மறுத்தார். அதேவேளையில் நீதிபதி பிவி நாகரத்னா, பெண்ணின் விருப்பத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு என்பது 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது உச்சநீதிமன்றம், ”மனுதாரர் ஏற்கனவே 26 வாரங்கள் காத்திருந்துள்ளார். இன்னும் சில வாரங்கள் காத்திருக்க முடியுமா? எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களிடம் கருவின் இதயத்துடிப்பை நிறுத்தி விடுங்கள் என எங்களை கூற வைக்க விரும்புகிறீர்களா?” என வருத்தத்தோடும், காட்டமாகவும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மனுதாரர் தரப்பில் அந்த பெண்ணின் நிலைமை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதை கேட்ட உச்சநீதிமன்றம், ”கருவில் இருக்கும் குழந்தையை கொல்ல முடியாது. அதேவேளையில் இது தாயின் உரிமையை கருத்தில் கொண்டு அணுக வேண்டும்” எனக்கூறி வழக்கின் விசாரணையை இன்றைய தினத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Chella

Next Post

இஸ்ரேல் போரால் இந்திய மக்களுக்கு வரும் புதிய சிக்கல்..!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!

Fri Oct 13 , 2023
இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. தொடர் ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு காரணமாக காசா நகரில் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். உணவு, மின்சாரம், தொலைதொடர்பு உள்ளிட்டவை இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இஸ்ரேலுக்கு உதவ தயாராக இருக்கும் வகையில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல் […]

You May Like