fbpx

ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமை மனநிலைக்கு மாறியது எப்படி? தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்..!

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளன.

அதில், ”பொதுக்குழு என்பது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்ற கட்சி சட்ட விதி உள்ளது. தற்காலிக அவைத் தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தாலும் 5ல் 1 பகுதியினர் ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்குத்தான் கோரிக்கை வைக்க முடியும். ஆனால், இந்த கூட்டத்தை கூட்ட அதிகாரம் இல்லாத அவைத் தலைவருக்குதான் 5ல் 1 பகுதியினர் கடிதம் அனுப்பி உள்ளனர்.

ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமை என்ற மனநிலைக்கு மாறியது எப்படி? தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்..!

ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு கடிதம் கொடுத்து அதில் ஒருவர் மறுப்பு தெரிவித்தால் கூட, கூட்டத்தை கூட்ட முடியாது. எனவே ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு தகுதியான நபராலோ அல்லது 15 நாட்கள் முன்னறிவிப்பு செய்தோ கூட்டப்படவில்லை. ஜூன் 23ஆம் தேதிக்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறுவதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை, அது கற்பனையானது. கட்சி விதிகளை மீறி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூடி மறைக்கும் வகையில் அந்த வாதம் முன்வைக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டால், அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வகை செய்யும் விதிகள், எவ்விதத்திலும் தற்காலிக அவைத் தலைவர் பொதுக்குழுவை கூட்ட அனுமதி வழங்கவில்லை.

ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமை என்ற மனநிலைக்கு மாறியது எப்படி? தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்..!

ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தடை விதிக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி அவரது பதவியில் சவுகரியமாக அமர்ந்துவிடுவார். மனுதாரர் ஓபிஎஸ், வைரமுத்து உள்ளிட்ட கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். இரட்டை தலைமைக்கு பதிலாக ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததற்கு எவ்விதம் புள்ளிவிவர அடிப்படையும் இல்லை. இரட்டைத் தலைமையில் தான் நான்கரை ஆண்டுகளாக கட்சியை நடத்தியது மட்டுமல்லாமல், முதலமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற பதவிகள் மூலம் அரசையும் நடத்தி உள்ளனர். இருவரும் சேர்ந்துதான் கூட்டணி, வேட்பாளர் போன்றவற்றில் முடிவெடுத்துள்ளனர். ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமை என்ற மனநிலைக்கு மாறியது எப்படி? என கேள்வி எழுகிறது.

ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமை என்ற மனநிலைக்கு மாறியது எப்படி? தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்..!

கட்சி தலைமை எடுக்கும் முடிவில் தலையிட முடியாது. அதேசமயம் அந்த நடைமுறையில் மீறல் இருந்தால் நீதிமன்றத்தில் நிவாரணம் கோர எவ்வித தடையும் இல்லை. அதனால் ஜூலை 11இல் நடந்த பொதுக்குழு செல்லாது. எனவே, அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர அனுமதித்தால் கட்சி தொண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இரு தலைவர்களுக்கு இடையிலான பிரச்சனை காரணமாக உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெற முடியாமல், தாங்க முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும். இரு தலைவர்களின் ஒப்புதலும் இல்லாமல் எந்த பொதுக்குழு, செயற்குழுவும் கூட்டக்கூடாது.

ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமை என்ற மனநிலைக்கு மாறியது எப்படி? தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்..!

ஒற்றைத் தலைமை குறித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்வது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்ட தடையில்லை. 5ல் ஒரு பகுதியினர் முறையாக கடிதம் கொடுத்து பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரினால் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ மறுக்கக் கூடாது. ஒருவேளை இருவருக்கு இடையில் எந்த காரணத்திற்காகவோ இந்த பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோரின் மனுக்கள் முடித்து வைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

கனியாமூர் தனியார் பள்ளி மீது புகார்..! வழக்காக பதிவு செய்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்..!

Wed Aug 17 , 2022
கனியாமூர் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிய புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தற்போது வழக்காக பதிவு செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த மாதம் 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், மாணவி உயிரிழந்து 3 […]
இன்னும் ஓரிரு நாளில் கனியாமூர் தனியார் பள்ளி அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு..?

You May Like