fbpx

முதலீடுகள் மூலம் 1 கோடி ரூபாய் பணத்தை சேர்ப்பது எப்படி??

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் பிரபலமான SIP மூலம் உங்கள் எதிர்காலத்திற்குத் தேவையான பணத்தை சேர்க்க முடியும். ஆமாங்க, எஸ்ஐபி திட்டங்கள் மூலம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்தால் கண்டிப்பாக 1 கோடி ரூபாயை சேமிக்க முடியும். அதைப் பற்றி விரிவாகக் காணலாம்.

நீங்கள் மாதம் தோறும் SIP இல் ரூ.10,000 என்று அடுத்த 15 ஆண்டுகள் தொடந்து முதலீடு செய்தால் (சராசரி ஆண்டு வட்டி 12% என வைத்துக் கொண்டால்) முதிர்வு காலத்தில் உங்களிடம் ரூ. 50 லட்சம் இருக்கும். அதே தொகை கிட்டத்தட்ட நீங்கள் 20 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால் 1 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருப்பீர்கள.

இந்த தொகையை வைத்து உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு, கல்யாணம் அல்லது உங்களின் ஓய்வு காலத்திற்காகவும் பயன்படுத்தலாம். பெரும்பாலும் இந்தியாவில் நடுத்தர வர்க மக்கள்தான் சேமிப்புகள் மீதும் அதன்மூலம் கிடைக்கும் லாபம் மீது அதிக ஆர்வமும், அறிவும் கொண்டிருப்பதால், இம்மாதிரியான திட்டங்கள் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சிக்கலில் இருந்து காப்பாற்றும் எனபதே உண்மை.

அதேசமயம் முதலீடு செய்பவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பற்றிய 50% அறிவைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் சரியான நிபுணர்கள் அறிவுரையின்கீழ் முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில் டெட் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எல்லா காலங்களிலும் கை கொடுக்கும் எனக் கூற முடியாது. ஏனெனில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்தினால் அவை நேரடியாக டெட் ஃபண்டுகளை தாக்கும்.

Maha

Next Post

ரஜினி பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென மைக்கை பிடுங்கிய ரம்யா கிருஷ்ணன்..!! அரங்கமே சும்மா அரண்டு போச்சு..!!

Sat Jul 29 , 2023
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று நடந்த ‘ஜெயிலர்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத பல விஷயங்களை பேசினார். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தனக்கு கதை சொல்ல வந்தது முதல், காக்கா – கழுகு குட்டிக்கதை, குடிப்பழக்கத்தால் வந்த விளைவு, சூப்பர் ஸ்டார் பட்டம், தன்னை செதுக்கிய இயக்குனர்கள் பட்டியல் என ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் டைட்டில் […]

You May Like