மது அருந்துபவர்கள் பலர் தங்களது கல்லீரல் முழுவதுமாக செயலிழந்த பிறகுதான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதுபோன்ற சூழ்நிலையில் உயிரை காப்பாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது.
மது அருந்துவதால் கல்லீரல் சிரோசிஸ் என்று சொல்லப்படும் நோய் உண்டாகிறது. இந்நோய் நீண்ட காலத்திற்கு மது அருந்துவதால் ஏற்பட்டு கல்லீரலை சேதப்படுத்திவிடும். மேலும் கல்லீரலை கடினமாக மாற்றி செயல்பட முடியாமல் செய்து, விரைவில் செயலிழக்க வைத்துவிடும்.
கல்லீரலை பாதுகாக்க சில கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் :
வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடையைப்(BMI) பராமரித்தல் அவசியம்.
சோடியம் நிறைந்த உணவு உண்ணுவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
முக்கியமாக புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் மது பழக்கம் இவற்றை படிப்படியாக நிறுத்த வேண்டும்.
மது பழக்கம் கல்லீரலை மட்டுமின்றி, அது மூளையையும் பாதிக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.
அதனை தொடர்ந்து சில உடற்பயிற்சி, யோகா மற்றும் உணவிலும் மாற்றம் செய்தால் மூளை பாதிக்கப்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.