fbpx

கடத்தல் தங்கத்தை ரன்யாவிடம் யார் கொடுத்தது..? எப்படி இந்தியா கொண்டு வந்தார்..?அவரே சொன்ன தகவல்..

ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை கடத்தியதாக பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில், கடத்தல் தங்கம் எவ்வாறு தனக்கு வழங்கப்பட்டது என்பது குறித்து ரன்யா ராவ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அதாவது ​​துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 இன் கேட் A இலிருந்து தங்கத்தை சேகரிக்க தனக்கு இண்டர்நெட் கால் வந்ததாக ரன்யா ராவ் தெரிவித்தார். தங்கத்தை கடத்துவது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறியிருந்தார்.

தனது பயணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிநாட்டு எண்கள் தனக்கு அழைப்பு விடுத்ததாக அவர் ஏற்கனவேஎ கூறியிருந்தார்.

விமான நிலைய சாப்பாட்டு அறையில் வெள்ளை கவுனில் ஒரு தெரியாத நபரிடமிருந்து இரண்டு பாக்கெட்டுகளை சேகரித்ததாக ரன்யா ராவ் தெரிவித்துள்ளார். கடத்தப்பட்ட தங்கம் “தடிமனான தார்பாலின் பிளாஸ்டிக் வகை” துணியால் சுற்றப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கத்தை ரன்யா ராவிடம் ஒப்படைத்த நபர் ஆறு அடி உயரமும், கோதுமை நிறமும், அமெரிக்க உச்சரிப்பும் கொண்டவர் என்று கூறப்படுகிறது.. அந்த நபர் ரன்யா ராவை ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று தங்கத்தை அவரிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் ரன்யா தங்கத்தை விமான நிலைய கழிப்பறைக்கு எடுத்துச் சென்று, விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு வாங்கிய 12 தங்கக் கட்டிகளை ஒட்டும் நாடாவைப் பயன்படுத்தி தனது உடலில் ஒட்டி மறைத்து வைத்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு அதை துண்டுகளாக வெட்டி எடுத்து, னது காலணிகள் மற்றும் பைகளில் சில தங்கத் துண்டுகளையும் மறைத்து வைத்தார் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கவனத்தை ஈர்க்காமல் தங்கத்தை எப்படி கடத்துவது என்று திட்டமிடுவதற்காக ரன்யா ராவ் YouTube வீடியோக்களைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

மார்ச் 3 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது, ​​கடத்தல் மோசடியில் ஈடுபட்ட ஒரு அதிகாரியிடமிருந்து விமான நிலைய பாதுகாப்பு மூலம் தப்பிக்க உதவி பெற்றதாக வருவாய் புலனாய்வு துறை கர்நாடக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவது குறித்து துப்பு கிடைத்ததால் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த ஆறு மாதங்களில் துபாய்க்கு 27 பயணங்களை மேற்கொண்டார், அவற்றில் 4 பயணங்கள் 15 நாட்களுக்குள் நடந்தன. எனினும் வணிகம் மற்றும் புகைப்படம் எடுப்பதற்காக பயணம் மேற்கொண்டதாக அவர் கூறியிருந்தார்.

Read More : பாகிஸ்தானை விடுங்க.. 2009-ல் இந்தியாவை உலுக்கிய ரயில் கடத்தல் சம்பவம் பற்றி தெரியுமா..?

English Summary

Ranya Rao has told the investigation about how the smuggled gold was given to her at Dubai International Airport.

Rupa

Next Post

“இன்னும் எத்தனை பேர் தான் என்னை பலாத்காரம் செய்வாங்க” விரக்தியில் இளம்பெண் செய்த செயல்..

Thu Mar 13 , 2025
7 men sexually harassed a young woman

You May Like