fbpx

2 மனித தலைகளை துண்டித்து நரபலி பூஜை..? நடிகர் பார்த்திபன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!!

இரண்டு மனித தலைகளை துண்டித்து நரபலி கொடுப்பது போன்ற ஒரு வீடியோவை இயக்குநர் பார்த்திபன் பகிர்ந்து, ‘இது என்னவென்று தெரிந்தால் சொல்லுங்கள்’ என்று ட்வீட் செய்துள்ளார்.

இரண்டு மனித தலைகளை துண்டித்து வாழை இலையில் வைத்து பூஜை செய்து கொண்டிருக்கும்படியான நரபலி வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ’இது என்னவென்று தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்! நானும் போலீசுக்கு தெரியப்படுத்தியுள்ளேன்’ என கூறியுள்ளார்.

அந்த வீடியோவில், இரண்டு இளைஞர்களின் தலை துண்டாக வெட்டப்பட்டு பூஜையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த தலைகளின் பக்கத்திலேயே இருவரது சடலமும் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடக்கிறது. காளி வேடத்தில் ஒருவர் கையில் கத்தியோடு ஆடிக்கொண்டிருக்கிறார். சாமியார் ஒருவர் பூஜை செய்கிறார். இதனை பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிர்ச்சியளிக்கும் இந்த வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோவை காண: https://x.com/rparthiepan/status/1731556550408630740?s=20

Chella

Next Post

ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

Mon Dec 4 , 2023
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (டிச.4) தமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று, சென்னையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை […]

You May Like