fbpx

அடக்கொடுமையே..!! காதலியின் பிறப்புறுப்பில் மிளகாய் வைத்து கொடுமைப்படுத்திய காதலன்..!! அதிர்ச்சி

தனக்குத் திருமணம் ஆனது தெரிந்ததும் தன்னை விட்டு காதலி விலகியதால் ஆத்திரமடைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து காதலியின் அந்தரங்கப் பகுதியில் மிளகாய் வைத்து திணித்து சித்ரவதை செய்திருக்கிறான் கொடூரன். அதை புகைப்படம் எடுத்து வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளான். பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் வசித்து வந்த நிகுஞ்ச் குமார் என்பவர் திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவரது மனைவி கிராமத்தில் தனியாக வசித்து வந்ததால், சூரத்தில் அந்த வாலிபர் தனியாக வசித்து வந்திருக்கிறார். அப்போது இளம்பெண் ஒருவர் நிகுஞ்ச் குமாருக்கு அறிமுகமாகியிருக்கிறார். அவரிடம் தனக்கு திருமணமான தகவலை மறைத்து பழகி வந்துள்ளார். இதையடுத்து, இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் நிகுஞ்ச் குமாருக்கு திருமணமானது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டிருக்கிறது. தகராறு ஒரு கட்டத்தில் முற்றியதை அடுத்து நிகுஞ்ச் குமாரிடமிருந்து பேசுவதை நிறுத்திக் கொண்டு அவருடன் பழகுவதையும் நிறுத்திக் கொண்டு அந்தப் பெண் காதலிப்பதிலிருந்து விலகியிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த நிகுஞ்ச் குமார் தொடர்ந்து அந்த பெண்ணை காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் காதலிக்க முடியாது என்று உறுதியாக சொன்ன அந்த பெண்ணை கேபிள் வயரால் அடித்து சித்திரவதை செய்திருக்கிறார் நிகுஞ்ச் குமார்.

பின்னர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து ஆத்திரம் தீராததால், காதலியின் அந்தரங்க பகுதியில் மிளகாய் திணித்து சித்திரவதை செய்துள்ளார். அந்த பெண் துடிதுடித்ததை வீடியோ, போட்டோ எடுத்து அதை வலைத்தளங்களில் வெளியிடப் போவதாகவும் மிரட்டியிருக்கிறார். இதன் பின்னர் அந்தப் பெண் போலீசில் சென்று புகார் அளிக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்து நிகுஞ்ச் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Chella

Next Post

கள்ளக்காதலர்களுக்குள் தகராறு..!! பஞ்சாயத்து செய்யப்போன இளைஞர் பீர் பாட்டிலால் குத்திக்கொலை..!!

Thu May 18 , 2023
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேவநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் உமாராணி (42). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் இறந்து விட்டார். இதனால் உமாராணி கோவையில் தங்கி, அங்கேயே வேலை பார்த்துக் கொண்டு தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். இதற்கிடையே, சிதம்பரத்தை சேர்ந்த பெயிண்டரான கணேசன் (30) என்பவருடன் உமாராணிக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் […]
கள்ளக்காதலர்களுக்குள் தகராறு..!! பஞ்சாயத்து செய்யப்போன இளைஞர் பீர் பாட்டிலால் குத்திக்கொலை..!!

You May Like