fbpx

இளம்பெண்களை குறிவைக்கும் கணவன் – மனைவி..! வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழில்..! பகீர் சம்பவம்

வாழ்க்கையில் ஏதாவது ஒரு நேரத்தில் தங்கள் வாழ்வு மாறிவிடாதா? என்று கிராமப் பகுதிகளில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் இளம்பெண்களை குறிவைத்து, அவர்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தான் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வேலைதேடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிராமங்களில் போதிய வேலைவாய்ப்பின்மை அல்லது படித்த படிப்புக்கு வேலை கிடைக்காதவையும் ஒரு சில காரணங்கள்தான். கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து தங்களை படிக்க வைத்த பெற்றோரை வீட்டில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வீட்டை மறந்து, சொந்தத்தை மறந்து, ஊரை மறந்து இளம்பெண்கள் பலரும் சென்னைக்கு வேலை தேடி வருகின்றனர்.

இளம்பெண்களை குறிவைக்கும் கணவன் - மனைவி..! வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழில்..! பகீர் சம்பவம்

பொதுவாக இளைஞர்களைப் போல இளம்பெண்களுக்கு அதிக அளவில் செலவுகள் இல்லை. உணவு தங்குமிடம் போன்றவற்றைத் தவிர அநாவசிய செலவுகளை தவிர்த்து வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி கிடைக்கும் சொற்ப ஊதியத்தை சேமித்து பெற்றோருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏராளமான இளம்பெண்கள் சென்னையில் பல பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை குறிவைத்து பாலியல் தொழில் ஈடுபடுத்திய மோசடி கும்பல் அதுவும் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்களை குறிவைக்கும் கணவன் - மனைவி..! வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழில்..! பகீர் சம்பவம்

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அப்பர் நகர் பகுதியில் வசிக்கும் கணவனும் மனைவியும் சேர்ந்து, சில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அறிவுறுத்தலின்படி அந்த குறிப்பிட்ட வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இரண்டு இளம்பெண்களை மிரட்டி அடைத்து வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

இளம்பெண்களை குறிவைக்கும் கணவன் - மனைவி..! வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழில்..! பகீர் சம்பவம்

குறிப்பாக, வெளியூரில் இருந்து வேலை தேடிவரும் கிராமப்புற பெண்களை குறிவைத்து தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண்களை மிரட்டி அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, இளம் பெண்களை மீட்ட போலீசார் அவர்களை அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். பெண்களுக்கு வேலை தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த கணவன் சதீஷ்குமாரையும் அவரது மனைவி சரளாவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Chella

Next Post

ஹலோ..!! தனுஷிடம் செல்போனில் மனம்விட்டு பேசிய ஐஸ்வர்யா..!! மௌனத்தில் முடிந்த கான்வெர்சேஷன்..!!

Fri Oct 7 , 2022
தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி மீண்டும் சேர்ந்து வாழவுள்ள நிலையில், தனுஷிடம் ஐஸ்வர்யா செல்போனில் மனம்விட்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுஷுக்கும் யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இரு குடும்பத்தாரும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து வைத்துள்ளனர். ஆனால், இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு முற்றியதால், கடந்த ஜனவரி மாதம் […]
மீண்டும் இணைந்த ஜோடி..!! ஐஸ்வர்யாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்..!! வீடியோ வைரல்..!!

You May Like