கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு (34). இவர் கடந்த 2021இல் இங்கிலாந்தில் கெட்டரின் பகுதியில் இருக்கும்போது மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்காக தன் கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் அதே பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கெட்டரிங் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அஞ்சு அசோக், அவரது மகள்கள் ஜீவா (6), ஜானகி (4) ஆகியோர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை முடிவுகளில் 3 பேரும் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அஞ்சுவின் கணவர் சஜூவிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில் மனைவியையும், மகள்களை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, விசாரணைகள் நடந்து முடிந்து வழக்கின் தீர்ப்பு வரும் ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து புறனாய்வு காவல் ஆய்வாளர் அதிகாரி, அஞ்சு ஒரு அர்ப்பணிப்பு உள்ள செவிலியர். அன்பான தாய். அவரை அவரையும் அவரது குழந்தைகளையும் கொன்ற சஜித் நிச்சயம் மனம் வருந்துவார் என்று கூறியிருக்கிறார்.