வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள குடியாத்தத்தில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்ற 3 ஆண்டுகளுக்கு முன்னர் நவீனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு ஜாஸ்மிகா என்கிற ஒருவயது பெண் குழந்தை இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர்கள் ஈரோட்டில் இருக்கும் முருகந்தொழுவு என்ற பகுதியில் வசித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தையுடன் விஜய் தனது சொந்த ஊரான மேச்சேரிக்கு சென்றுள்ளார்.
குடும்பத்தை அங்கே விட்டுவிட்டு விஜய் மட்டும் முருகந்தொழுவுக்கு வந்துள்ளார். அப்போது கிணற்றுக்கு அருகில் அமர்ந்து மது குடித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக குடிபோதையில் விஜய் கால் தடுமாறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் பலமணி நேர போராட்டத்திற்கு பி்ன்னர் விஜயின் உடலை மீட்டுள்ளனர். மேலும் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.